திருப்பூர் : தாராபுரத்தில், நகை சீட்டு நடத்தி, 3.50 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, கடை உரிமையாளரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பெரிய கடை வீதியை சேர்ந்தவர் ஹரிஹர ஜெகநாதன், 39. பொள்ளாச்சி ரோட்டில் நகை கடை நடத்தி வருகிறார். வாடிக்கையாளர்கள் நகை சீட்டில் சேர்ந்து, 1,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் கட்டினர். நகை சீட்டு முதிர்வடைந்த நிலையில், கட்டிய பணத்துக்கு நகையை வழங்காமல் காலம் கடத்தி வந்தார்.கடந்த மாதம் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
400க்கும் மேற்பட்டோர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், 3 கோடியே, 50 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரிந்து, குற்றப்பிரிவு போலீசார் ஹரிஹர ஜெகநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால், கடை உரிமையாளர் உட்பட அவரது குடும்பத்தினர், ஐந்து பேர் திருச்சியில் உள்ள ஓட்டல் அறையில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தலைமறைவான கடை உரிமையாளர் ஹரிஹர ஜெகநாதனை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது நகை கடையில், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE