கோவை : கோவையில் இதுவரை, 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் புதிதாக, 71 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு, 53 ஆயிரத்து 331 ஆக உயர்ந்தது. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 69 வயது மூதாட்டி நேற்று உயிரிழந்தார். பலி எண்ணிக்கை, 662 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 83 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 52 ஆயிரத்து ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE