குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் 43 தேயிலை தொழிற்சாலைகளில், கடந்த நவ., - டிச., மாதங்களில், தேயிலை வாரிய தர மேம்பாட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதில், சுகாதார குறைவு, ஆவணங்கள் பராமரிப்பின்மை, விவசாயிகளுக்கு விலை உயர்வு வழங்காதது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் தேயிலை கழிவுகளை சேர்த்து வைத்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, 30 தேயிலை தோட்ட தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறுகையில்,''தொழிற்சாலைகளில் இருந்து பதில் கிடைத்த பின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE