ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்வதால் முதற்கட்ட கணக்கெடுப்பில் 40 ஆயிரம் எக்டேர்நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
மாவட்டத்தில் மானாவாரியாக 1.20 லட்சம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபருக்குமுன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். நவ., டிசம்பரில் நிவர், புரெவி புயல் காரணமாக நல்ல மழை பெய்தது. இதன் மூலம் ஆண்டு சராசரி மொத்த மழை 827 மி.மீ., விட 845 மி.மீ.., மழை பெய்துள்ளது.ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டனம், நயினார்கோயில், சிக்கல், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி ஆகிய இடங்களில் வயல்வெளியில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் அழுகியுள்ளன.
மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:மாவட்டத்தில் தொடர் மழையால் முதற்கட்ட ஆய்வில் 40ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது, சேதம் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடக்கிறது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE