மதுரை : மதுரை ஆஸ்டின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை பெருங்குடி அருகே அயன்பாப்பாகுடியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் சிலர் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை வணிக நோக்கில் எடுக்கின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்து லாரிகள், ஜெனரேட்டர்கள், இதர பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.மதுரை கலெக்டர், மதுரை தெற்கு தாசில்தாரிடம் புகார் செய்தோம். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசுத்தரப்பு,'8 பேர் அனுமதியின்றி தண்ணீர் எடுக்கின்றனர். 2 பேர் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர்,' என தெரிவித்தது. நீதிபதிகள்: வழக்கு முடிவுக்கு வரும்வரை மதுரை தெற்கு தாசில்தார், மேலுார் ஆர்.டி.ஓ., எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது. இதுவரை அனுமதி பெறாத தனிநபர்கள் வணிக நோக்கில் தண்ணீர் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE