பழநி : பழநியில் விடிய விடிய பெய்த மழையால் பாதயாத்திரை பக்தர்கள் பாதித்தனர்.
பழநி முருகன்கோயிலுக்கு வெளிமாநில, மாவட்ட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் வந்தவண்ணம் உள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மார்கழியில் அடைமழையாக பெய்கிறது. இதனால் அதிகாலை, மாலை நேரங்களில் நடந்து வரும் பக்தர்கள் குளிரால் நடுங்குகின்றனர். இதில் குழந்தைகள், வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தங்குமிடங்களில் மழை வெறிக்கும் வரை காத்திருந்து தாமதமாக யாத்திரையை தொடர்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE