திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 99 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் 6.42 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.2500 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தினமும் 200 கார்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.2500 வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 99 சதவீதம் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. விடுப்பட்டவர்கள் ஜன.25 ம் தேதி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் ரேஷன் கடையில் பெற்றுக்கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE