சிக்கல் : மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரியும், 2018 ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை முழுவதுமாக வழங்கிட கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக, சிக்கலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரசீது அலி தலைமை வகித்தார்.
சிக்கல் பாசன சங்க செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். சி.பி.எம்., தாலுகா செயலாளர் பச்சமால், பாக்கியநாதன், காதர், அம்மாவாசி, ஜெயக்குமார், ஊராட்சி துணைத்தலைவவர் நுாருல் அமின், மாவட்ட செயலாளர் மயில்வாகனன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர்சிவாஜி உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE