சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே வேலாம்பட்டியில் அப்துல் கலாம் மாணவர்கள் நற்பணி மன்றம் மற்றும் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
எமக்கலாபுரம் ஊராட்சி தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். நுாலகம் லயன்ஸ் தலைவர் வெங்கடேசலு முன்னிலை வகித்தார். முன்னாள் விமானப்படை வீரர் பெருமாள் புத்தகங்கள் வழங்கினார். பல்வேறு தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வட்டார தலைவர் குழந்தைவேல்சாமி, மன்ற இணை செயலாளர் மகாலட்சுமி, தலைவர் மருதைக்கலாம், நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜான்சன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE