திண்டுக்கல் : கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் 6.42 லட்சம் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தினமும் 200 கார்டுகள் வீதம், ஜன.4 ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரேஷன் கார்டு தொலைந்து போனவர்கள் குடும்ப அட்டையில் உள்ள ஏதேனும் ஒருவரின் ஆதார் கார்டு மூலம் தங்கள் அலைபேசிக்கு வரும் ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓ.டி.பி.) அடிப்படையில் பொங்கல் பரிசை ஜன.25 வரை பெறலாம். பொருட்கள் வாங்க ஆதாருடன் செல்ல வேண்டும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE