கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் இரு நாட்களாக பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மூல வைகை ஆறு உற்பத்தியாகும் வருஷநாடு மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை விட்டு விட்டு பெய்வதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் அறிவுறுத்தி உள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE