அவனியாபுரம் : ''மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை காண ராகுல் வருவது கூடுதல் சிறப்பு. ஜல்லிக்கட்டையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது'' என செல்லுார் ராஜூ தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மேடை ஏற்பாடுகளை அமைச்சர் செல்லுார் ராஜூ, எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா, கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆய்வு செய்தனர். செல்லுார் ராஜூ கூறியதாவது: தைப்பொங்கல் அன்று தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் தொடங்குவது பெருமையை அளிக்கிறது. ஜல்லிக்கட்டை காண வரும் அனைவருக்கும் வரவேற்பு அளிக்கப்படும். மழைப்பொழிவு இருந்தாலும் ஜல்லிக்கட்டு கட்டாயம் நடைபெறும். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு மழையும், வெயிலும் ஒன்றுதான். கூடுதல் நேர ஒதுக்கீடு பற்றி அப்போது யோசிக்கப்படும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE