நெட்டப்பாக்கம்; தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் விஜயலட்சுமி, கையெழுத்திட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தேர்தலில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பேசினார். ஏம்பலம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பங்கேற்று கையெழுத்திட்டனர் பள்ளி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாஷ், பக்தன் செய்திருந்தனர். தலைமை ஆசிரியை அருள்மொழி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE