புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரியில், கொரோனா விழிப்புணர்வு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநில கூட்டுறவு துறை இணை பதிவாளர் சரோஜினி தலைமை தாங்கினார். கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார். கல்லுாரி முதல்வர் செந்தில் வினோத் முன்னிலை வகித்தார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மையமாக வைத்து கோலம், ஓவியப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE