புதுச்சேரி; சென்டாக் மாப் அப் கவுன்சிலிங்கில் 26 மருத்துவ இடங்களை காரைக்கால் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது,புதுச்சேரி சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் நாகராஜன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால்,18 சதவீதம், மாகி, 4 சதவீதம்,ஏனாம், 3 சதவீதம் புதுச்சேரி 75 சதவீதம் என்ற பிராந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டும் அந்த அடிப்படையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்தது.மாப் அப் கலந்தாய்வில் காரைக்கால் பிராந்திய 18 சதவீத இட ஒதுக்கீட்டின் 26 மருத்துவ இடங்கள் அளிக்க வேண்டும். தற்போது 23 இடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசும் சென்டாக் நிர்வாகமும் தலையிட்டு காரைக்கால் பிராந்திய இட ஒதுக்கீட்டின் 18 சதவீத இட ஒதுக்கீடான 26 மருத்துவ இடங்களை காரைக்கால் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இல்லையெனில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் கோர்ட்டிற்கு செல்லும் நிலை உருவாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE