புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று 3002 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 17 பேர், காரைக்கால் 6, மாகே 2 ; ஏனாம் 4 பேர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 524 ஆனது.மருத்துவமனைகளில் 115 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 163 பேர் உட்பட 278 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 639 ஆக நீடிக்கிறது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது. நேற்று 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 607ஆனது. இது வரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 786 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 741 பேருக்கு தொற்று இல்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE