புதுச்சேரி: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மங்கலம் சொசைட்டி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. லாஸ்பேட்டை, சலவையாளர் நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடந்த பயிற்சி முகாமை, முன்னாள் இணை செயலாளர் சுமதி துவக்கி வைத்தார். தொடர்ந்து, 'மகளிருக்கான தலைமைப் பண்புகள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் இளம்பரிதி பேசினார். முகாமில் வங்கிக் கடன், சுய தொழில் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளித்தனர். நேருக்கு நேர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.முகாம் ஏற்பாடுகளை, மங்கலம் சொசைட்டி அலுவலர் ரீனா, சுய உதவிக் குழு நிர்வாகி முத்தமிழ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE