கண்டாச்சிபுரம்; கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றிய ஓவியர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.கண்டாச்சிபுரம் வட்ட ஓவியர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தாசில்தார் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஓவியர்கள் சங்க வட்டாரத் தலைவர் முருகவேல் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கொரோனா ஊரடங்கின் போது அரசு அதிகாரிகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பணியை மேற்கொண்ட ஓவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை தாசில்தார் கார்த்திகேயன் வழங்கினார்.சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், டாக்டர் மூர்த்தி ஆகியோர் பாராட்டி பேசினர்.நிகழ்ச்சியில், அரிமா சங்க நிர்வாகி குணசேகரன், அய்யப்ப சேவா சங்க நிர்வாகி விஜய ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE