விழுப்புரம்: விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் பிருந்தா அறிமுக உரையாற்றினார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக்குழும பதிவாளர் சவுந்தரராஜன், பொங்கல் விழாவின் முக்கியத்தவம் குறித்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், கோல போட்டிகள் நடந்தது. பின், தமிழர் பண்பாட்டை போற்றும் வகையில், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், உறியடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு கூடிய நடன போட்டிகளும் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.விழாவில் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மக்கள் தொடர்பு அலுவலர் கண்மணி அன்புசெல்வி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE