விக்கிரவாண்டி; ஆற்றில் குளித்தபோது, மாயமான சென்னை மாணவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது.சென்னை, ராயபுரத்தை சேர்ந்த அற்புதராஜ் மகன் தீனா,16; விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த நெடிமோழியனுாரில் பாட்டி சுப்புலட்சுமி,60: வீட்டில் தங்கியிருந்த இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள தொண்டியாற்றில் குளித்தார். அப்போது, தீனா தண்ணீரில் மூழ்கி மாயமானார்.அவரை திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையில் பேரிடர் மீட்பு குழுவினர் வெகு நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இரவானதால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.இரண்டாம் நாளான நேற்று மீண்டும் தேடும் பணி துவங்கியது. அதில் நேற்று மதியம் தீனா உடலை மீட்பு குழுவினர் மீட்டனர்.தீனா உடலை பெரியதச்சூர் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE