கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முதல்வர் பழனிசாமியை, அவதுாறாக பேசி வரும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரை கண்டித்து நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலுபாபு, முன்னாள் எம்.பி., காமராஜ், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றியச் செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். இதில், முதல்வர் பழனிசாமியை அவதுாறாக பேசி வரும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி, கனிமொழி ஆகியோரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தங்கபாண்டியன், வழக்கறிஞரணி பொருளாளர் வெற்றிவேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, நாகலுார் கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, கதிர் தண்டபாணி, துரைராஜ், அரசு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனி, சேகர், சந்தோஷ், பழனிவேல், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், நகர செயலாளர்கள் ஷியாம் சுந்தர், சுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் பாபு நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE