கச்சிராயபாளையம்; மாதவச்சேரி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ், 28; இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரும் அதே பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில், துாண்டில் போட்டு மீன் பிடித்துக்கொண்டிருந்தார்.அப்போது வலிப்பு ஏற்பட்டதால், சதீஷ் கிணற்றில் தவறி விழுந்தார். உடன் ஏழுமலை கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சதீசை மீட்க முயற்சி செய்தனர்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் உள்ள கிணற்றில் இறங்கி சதீஷின் உடலை இறந்த நிலையில் மீட்டனர். சதீஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இறந்து சதீஷ்க்கு, இரண்டு மாத குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE