திருக்கோவிலுார்; திருக்கோவிலுாரில் பொங்கலுக்கு புது பானை விற்பனை சூடுபிடித்துள்ளது.தை பொங்கல் என்றாலே புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து, உழவுக்கு கைகொடுக்கும் சூரிய பகவானுக்கும், உழவர்களின் உற்ற நண்பனாக இருக்கும் மாடுகளையும் வணங்கி நன்றி செலுத்தும் விழா.இதற்காக புதுப்பானை திருக்கோவிலுார் ஏரிக்கரை மூலை, 5 முனை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்த பொங்கல் பானைகள், அடுப்பு உள்ளிட்ட மண்பாண்டங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர்.பானை தயாரிப்பதற்கான களிமண் கிடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட காரணங்களால் மண்பாண்டங்களின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. பொங்கல் வைக்கும் பானை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பொங்கல் வைப்பதற்கு மட்டுமல்லாது எதிர்வரும் கோடை காலத்தில் குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பொதுமக்கள் மண்பாண்டங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றதை பார்க்க முடிந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE