சிறுபாக்கம்; பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கலெக்டரிடம், கணேசன் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கினார்.மனு விபரம்:கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி பகுதிகளில், நெல், மரவள்ளி, மக்காச்சோளம், பருத்தி, வாழை பயிர்கள் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்தன. இதனை, ஆய்வு செய்த அதிகாரிகள் சில பகுதிகளில் மட்டுமே, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் முற்றிலும் பாதித்துள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கள ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE