கடலுார்; கடலுாரில், கிராமப்புற மாணவிகளின் முன்னேற்றத்திற்காக பெண் கல்வியில் சிறந்து விளங்கியதற்கான விருது வழங்கும் விழா நடந்தது.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில், நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் முல்லை தலைமை தாங்கினார். தெரேஸ் பாத்திமா வரவேற்றார். பொருளியல் துறை தலைவர் ஷபினாபானு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.விழாவில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியல் மன்றம் சார்பில் பெண் கல்வியில் சிறந்து விளங்கியதற்கான விருதை அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ்கா, புதுச்சேரி அறிவியல் மன்ற ஆலோசகர் அருண் நாகலிங்கம் , பெரியார் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த் துறை பேராசிரியர் ஜானகி ராஜா ஆகியோர் வழங்கி, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.விழாவில் பெஞ்சமின் ராஜூ, அறிவியல் மன்ற குழுத் தலைவர் ஸ்டெயின்ஸ் ஹென்றி, சென்னை தொழிலாளர் கல்வி நிலைய மாணவி செட்ரீஷியா ஹெப்சி மற்றும் கல்லுாரி மாணவியர் பலர் பங்கேற்றனர்.வேதியியல் துறை தலைவர் ரம்யா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE