கடலுார்; கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழா மற்றும் மாணவ, மாணவியருக்கு கோலப் போட்டி நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், செயலர் விஜயகுமார், முதன்மைச் செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். சிறப்பு அழைப்பாளர் சூப்பர் சிங்கர் புகழ் நாதஸ்வர கலைஞர் பார்த்திபன் பேசினார்.கொரோனாவை ஒழிப்போம், நெகிழி பொருட்களை ஒழிப்போம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம், மரம் வளர்ப்போம் என பல்வேறு தலைப்புகளில் கோலப்போட்டி நடந்தது.சிறந்த கோலமிட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE