சூதாடிய மூவருக்கு 'காப்பு'திருத்தணி: திருத்தணி அடுத்த, பட்டாபிராமபுரம், நாகலம்மன் கோவில் அருகே, சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று, மேற்கண்ட இடத்தில் சோதனை நடத்தினர். அப்போது, பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், 45, விஜயகுமார், 43 மற்றும் பாரதி, 35, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, 500 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE