உடுப்பி: பயணிகள் ஏற்றி செல்வதில் தனியார் பஸ்களிடையே ஏற்பட்ட போட்டியில், டிரைவர் கடுமையாக தாக்கப்பட்டார்.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரிலிருந்து உடுப்பிக்கு, ஏ.கே.எம்.எஸ்., மற்றும் கோகினுார் என இரு தனியார் பஸ்கள், நேற்று காலை புறப்பட்டன.பஸ்சில் பயணியரை ஏற்றும் போட்டியில், இரு பஸ்களும் வேகமாக இயக்கப்பட்டன. ஒரு கட்டத்தில், உடுப்பி மாவட்டம், கவுப் பஸ் நிறுத்தத்தில், ஏ.கே.எம்.எஸ்., பஸ்சை முந்தி சென்ற, கோகினுார் பஸ், அங்கிருந்த பயணியரை தங்கள் பஸ்சில் ஏற்றிக் கொண்டது.இதனால் கோபமடைந்த, ஏ.கே.எம்.எஸ்., பஸ் ஓட்டுனர் இர்ஷாத், நடத்துனர் பவன் ெஷட்டி ஆகியோர், கோகினுார் பஸ்சை, சாலையின் நடுவே நிறுத்தினர்.பஸ் அருகில் சென்ற இருவரும், அந்த பஸ் ஓட்டுனரை தகாத வார்த்தைகளில் திட்டி, இரும்பு ராடால் பஸ்சை சேதப்படுத்தினர்.இதை பயணி ஒருவர், மொபைல் போனில் படம் எடுத்தார். இதை பார்த்தல அவர்கள், பயணியையும் தாக்க முயற்சித்துள்ளனர்.இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக, போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE