சென்னை; காவல் துறையில் பணிபுரியும், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பணியின்போது இறந்த காவலர்களின் வாரிசுகள் மற்றும் மனைவிக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப, கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.அந்த வகையில், சென்னை போலீசில் பணியின்போது இறந்த, போலீசாரின் மனைவி மற்றும் வாரிசுகள், 270 பேருக்கு, கணினியில் தகவல் பதிவு உதவியாளர் என, அரசு வேலை வழங்கப்பட்டுஉள்ளது. அவர்களுக்கு, சென்னை வேப்பேரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பணி நியமன ஆணைகளை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கி வாழ்த்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE