ஈரோடு: ஈரோடு மாநகர மாவட்ட காங்., சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ரவி தலைமையில், மகிளா காங்., தலைவர் புவனேஸ்வரி முன்னிலையில், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு பகுதியை சேர்ந்த ஏழைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் உதவி பொருட்கள் வழங்கினர். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, சிறுபான்மை பிரிவு சுரேஷ், பாஷா, அர்ஷத், விஜயபாஸ்கர், கோமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE