ஈரோடு: இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி, ஷீரடி சாய்பாபா கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா, தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதல் எனப்படும், போகி பண்டிகை புகையில்லாமல் கொண்டாடிய நிலையில், நேற்று இயற்கையை பாதுக்காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஈரோடு கருங்கல் பாளையம் ஷீரடி சாய்பாபா கோவிலில், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 16 பெண்கள் மட்டும் பங்கேற்று மண் பானையில், பச்சரிசி, வெல்லமிட்டு பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வந்ததும், பொங்கலோ, பொங்கல் என்று குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்பின், சுவாமிக்கு படையலிட்டு இயற்கையை பாதுகாக்க வேண்டும் என, வலியுறுத்தி வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE