சங்ககிரி: முட்டையிட்டு அடைகாக்கும் பாம்பால், மக்கள் அச்சப்படும் நிலையில், வனத்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.
சங்ககிரி, காவேரிப்பட்டி ஊராட்சி, சென்றாயனூர் தெற்கு தோட்ட குடியிருப்பு பகுதியில், சாலையோரம், குடிநீர் திறந்துவிடும் கேட்வால்வு பயன்பாடின்றி உள்ளது. அதில், ஒரு நாகப்பாம்பு, 50க்கும் மேற்பட்ட முட்டைகள் இட்டு, ஒரு மாதமாக அடைகாத்து வருகிறது. அந்த பாம்பு, சில நேரங்களில் இரையைத்தேடி குடியிருப்பு பகுதிக்கு சென்று வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். தேவையான இரை கிடைத்ததும், மீண்டும் முட்டைகளை அடைகாக்க, தொட்டிக்குள் சென்றுவிடுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள், பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட, கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஒரு வாரத்துக்கு மேலாகியும், வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனால், இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே, மக்கள் அச்சப்படுகின்றனர். மாவட்ட அதிகாரிகள், பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE