சங்ககிரி: சங்ககிரி, தேவூர், தேவர் தெருவை சேர்ந்த, நூல் மில் தொழிலாளி நடேசன், 54. தேவூர், பங்களா தெருவை சேர்ந்தவர் தங்கராசு, 58. இவருக்கு, ஒரு வாரத்துக்கு முன், நடேசன், 100 ரூபாய் கடன் கொடுத்தார். அப்பணத்தை, நேற்று முன்தினம், நடேசன் கேட்டபோது, தர மறுத்த தங்கராசு, கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். அதில், இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், நடேசனின் இடதுபுற காதை கடித்து, தங்கராசு துப்பிவிட்டார். நடேசனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மகன் பிரபாகரன் ஓடிவர, தங்கராசு தப்பி விட்டார். பின், தந்தையை இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்கு, நடேசன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, தேவூர் போலீசார், நேற்று வழக்குப்பதிந்து, தங்கராசை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE