ஓசூர்: ஓசூர், அரசு மருத்துவமனையில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து, நேற்று பொங்கல் வைத்து கொண்டாடினர். ஓசூர், அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மருத்துவமனை முதன்மை மருத்துவர் பூபதி தலைமையில், நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் மண்பானையில் பொங்கலிட்டு பண்டிகையை கொண்டாடினர். பொங்கல் பொங்கிய நேரத்தில், அனைவரும் ஒன்றாக,'பொங்கலோ, பொங்கல்' என கோஷமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் மொபைல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர். கொரோனா தடுப்பு பணியால், நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் இருந்த மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், செவிலியர்களுக்கு, மருத்துவமனை வளாகத்தில் நடந்த பொங்கல் விழா மகிழ்ச்சியை கொடுத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE