வந்தவாசி: வந்தவாசியில், ரங்கநாத பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், ரங்கநாத பெருமாள் கோவிலில், மார்கழி மாதம் முழுவதும், திருப்பாவை பாசுரங்கள் பக்தர்களால் தினமும் பாடப்பட்டு, ஆண்டாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீப ஆராதனை நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, ரங்கநாத பெருமாள் கோவில் பிரகாரத்தை, மங்கள இசை வாத்தியத்துடன், வலம் வந்து, பட்டாச்சாரியார்கள் சிறப்பு யாக சாலை பூஜை செய்தனர். தொடர்ந்து, ஆண்டாள், ரங்கநாத பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழாவில், சிறுமிகளின் நடன நிகழ்ச்சிகள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE