புதுடில்லி: சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தையும், சர்வதேச முனையத்தையும் இணைக்கும் வகையில், புதிய முனையம் கட்டும் பணி நடந்து வருகிறது. 23 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தை, ஆண்டுக்கு, 2.1 கோடி பயணியர் உபயோகிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, உள்நாட்டு முனைய கட்டடம், வரும் ஜூன் மாதம் கட்டிமுடிக்கப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. பின், சர்வதேச முனையத்திற்கான பகுதி, அடுத்த ஆண்டு இறுதியில், கட்டிமுடிக்கப்பட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE