மதுபானி: பீஹாரின் மதுபானி மாவட்டத்தில், 15 வயதான காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரை, நேற்று முன்தினம், சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், காட்டிக்கொடுக்க முடியாமல் போகவேண்டும் என்பதற்காக, அந்த சிறுமியின் கண்கள், கூர்மையான ஆயுதங்களால் சிதைக்கப்பட்டன. கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமிக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மூன்று பேர், கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் நேற்று தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE