கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் தொடர் மழையால் விவசாயிகள் அவதிப்பட்டுள்ளனர். கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி, வயலூர், சரவணபுரம், வரகூர், வேங்காம்பட்டி, லாலாப்பேட்டை, வல்லம் ஆகிய இடங்களில், தொடர்ந்து விட்டு விட்டு லோசனது முதல், மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மானாவாரி சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிர் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். கால்நடைகளுக்கு மேய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE