குளித்தலை: பொங்கலை முன்னிட்டு பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை சார்பில், குளித்தலை யூனியன் அலுவலகத்தில், தாலுகா அளவில், 4,588 பேருக்கு பொங்கல் தொகுப்பு, மூன்றாவது நாளாக வழங்கப்பட்டு வருகிறது. நேற்று, ஏராளமான ஆண்களும், பெண்களும் கொட்டும் மழையில் குடை பிடித்து கொண்டு கைக் குழந்தையுடன் வரிசையில் காத்துக்கிடந்தனர். மக்களை அலைக்கழிக்காமல், அவர்கள் வீடு தேடி அரசு உதவி தொகை சென்றடைய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நோய் தொற்றுள்ள வேளையில் கொட்டும் மழையில், சமூக இடைவெளியின்றி, பொங்கல் பொருள் வாங்க அவதிப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக, அங்கு வந்திருந்த பெண்கள் வேதனை தெரிவித்தனர். இந்த பொருட்களை யூனியன் மற்றும் பஞ்.. அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம் என்றும், புகார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE