கரூர்: கரூரில், வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர் ரத்தினம் சாலையில் உள்ள இரட்டை வாய்க்காலில், கடந்த சில நாட்களுக்கு முன் தூர்வாரும் பணி நடந்தது. இதனால், கழிவுநீர் சீராக சென்றது. தற்போது, ரத்தினம் சாலையில் உள்ள, ஓட்டல்கள், டீ கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கப்கள், பேப்பர்கள் வாய்க்காலில் கொட்டப்படுகின்றன. இதனால், மீண்டும் வாய்க்காலில் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவு தேங்கி நிற்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. அதை கொட்டுவோர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE