கரூர்: சாலையில் வழிந்தோடும் செப்டிக் டேங்க கழிவுநீரால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர் நகராட்சி வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசிம் தெருவில் பாதாள சாக்கடை தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதோடு பல்வேறு நோய்கள் பரவும் நிலையும் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது; கடந்த, இரண்டு நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அடைப்பை சரி செய்யாமல் விட்டதால், தொட்டி மூடியிலிருந்து கழிவு நீர் நிரம்பி சாலையில் ஓடுகிறது. இங்கு, ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் உட்பட குடியிருப்புகள் உள்ளதால், தினமும் லிட்டர் கணக்கில் கழிவுநீர் செல்கிறது. நேற்று காலையில் சாலையில் வெள்ளம் போகும் அளவிற்கு, கொப்பளித்து வெளியே கழிவுநீர் ஓடியது. அனைவரும் இதனை மிதித்து தான் சொல்லவேண்டியுள்ளது. இதனால், வீடுகளில் உட்கார முடியவில்லை. அந்தளவுக்கு துர்நாற்றம் வீசியது. கொரோனா பரவல் இருக்கும் போது, இதுபோன்ற கழிவுநீரால் பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE