நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், ஜன., 15ம் தேதி (நாளை) திருவள்ளுவர் தினம், 26ம் தேதி குடியரசு தினம், 28ம் தேதி வள்ளலார் நினைவு நாள் ஆகிய மூன்று நாட்களுக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள் ஆகியவை மூட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மூன்று தினங்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, அனைத்து மதுபான கடைகளும் மூடி வைக்க வேண்டும். விதிமுறை மீறி திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE