நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூசூரில் மகளிருக்கான மாநில அளவிலான கைப்பந்து, கபடி போட்டி நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் தூசூரில், 'இளம்புலி ஸ்போர்ட்ஸ் கிளப்' சார்பில், பொங்கல் பண்டிகை நாட்களில் மகளிருக்கான மாநில அளவில் கைப்பந்து மற்றும் கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், 24ம் ஆண்டாக இன்று துவங்கி, இரண்டு நாட்களுக்கு மகளிருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. தொடர்ந்து, வரும், 16ல் கபடி போட்டி நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன. ஏற்பாடுகளை, செயலாளர் அருணகிரி, தலைவர் கருப்பையா, முன்னாள் வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE