கோவை:தஞ்சாவூரை சேர்ந்த பிறந்து இரண்டு மாதங்களே ஆன, ஆரூரான் என்ற குழந்தைக்கு இருதய பாதிப்பு இருப்பது தெரியவந்தது.அறுவை சிகிச்சை தேவைப்பட்டதால், ஆம்புலன்ஸ் டிரைவரின் ஒத்துழைப்புடன், மூன்று மணி நேரத்திற்குள் கோவைக்கு குழந்தை அழைத்து வரப்பட்டது. குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.குழந்தையின் தந்தை ஜீவா கூறுகையில், ''அறுவை சிகிச்சை முடிந்து, குழந்தை வென்டிலேட்டரில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்கு பின்னர்தான் குழந்தையின் உடலம் நலம் குறித்து சொல்ல முடியும், என டாக்டர்கள் கூறியுள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE