திருப்பூர்:போதிய அளவில் பஸ் இயக்கப்படாததால், சொந்த ஊர் செல்ல பஸ் இல்லாமல் இரவில், மழையில் பயணிகள் தவித்தனர்.கடந்த, 12ல் தேதி சிறப்பு பஸ் இயக்கம் துவங்கியது. முதல் கட்டமாக, 90 பஸ் இயக்கப்பட்டது. கூட்டத்துக்கு ஏற்ப பஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் நாளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே புது பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகமாக இருந்தது.சேலம், திருவண்ணாமலை, செங்கம் செல்ல போதிய அளவில் பஸ் இயக்கப்படவில்லை. யுனிவர்சல் தியேட்டர் பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ் கூட இல்லாத நிலையில், பயணிகள் ஸ்ரீ சக்தி தியேட்டர் ரவுண்டானா முன், திரண்டிருந்தனர்.இரவு, 11:00 மணி முதல் அரைமணி நேரம் சேலத்துக்கு பஸ் வரவில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், பயணியர் சிரமப்பட்டனர். வந்த ஓரிரு பஸ்சில் ஒருவருக்கொருவர் முட்டிமோதி கொண்டு ஏறினர்.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒரே நேரத்தில் அதிகளவில் பயணிகள் வந்ததால், காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறப்பு பஸ் இயக்கம் குறைக்கப்படவில்லை,' என, சமாளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE