திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு, ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று கூடியது.சி.ஐ.டி.யு.,மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் சேகர், சி.ஐ.டி.யு., பனியன் சங்க செயலாளர் சம்பத், எல்.பி.எப்., துணை தலைவர் ரங்கசாமி, ஐ.என்.டி.யு.சி., செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ்., மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தம் மற்றும்தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை உடனே திரும்ப பெற வேண்டும். குடியரசு தினவிழா அன்று, கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE