திருப்பூர்:திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல ஸ்டேஷன்களில் பாரம்பரிய உடையில் போலீசார் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. வளாகத்தில் வண்ண கோலமிட்டு, கரும்பு உள்ளிட்டவை வைத்து அலங்கரித்தனர்.பங்கேற்ற போலீசார் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் பங்கேற்றனர். போலீசார் அனைவரும் இணைந்து பொங்கல் வைத்து, சூரியனை வழிபட்டனர்.பூஜைக்கு பின், பொதுமக்களுக்கு அக்கம்பக்கத்தினருக்கு போலீசார் வழங்கி, வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.விழாவில், வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போலீசார் பங்கேற்றனர். அதேபோல், மாநகர மற்றும் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஸ்டேஷன்களில் பாரம்பரிய உடையில் போலீசார் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE