வெள்ளகோவில்:தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பலவஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாவட்ட செயலாளர்கள் சாமிநாதன், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தி.மு.க., மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அலுவலக வாசலில் புதுப்பானை வைத்து பொங்கல் வைக்கப்பட்டது.மாவட்டம் முழுவதும் கிளைகள் வாரியாக சமத்துவ பொங்கல் விழா, கிளை நிர்வாகிகள் தலைமையில் நடந்தது. இவற்றில் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE