அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, பொது சுகாதார பிரிவு சார்பில், விழிப்புணர்வு பொங்கல் விழா புது பஸ் ஸ்டாண்டில் நடந்தது.துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், கொசு மற்றும் மலேரியா தடுப்பு பணியாளர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் தங்கள் சீருடையுடன், முக கவசம் அணிந்து, பொங்கலிட்டனர். பயணிகளுக்கு பொங்கல் வழங்கினர்.''பண்டிகையின்போது, தனி மனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடை பிடிக்க வேண்டும். நோயில்லா பொங்கலை கொண்டாடுவோம்'' என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாநகராட்சி இரண்டாம் மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE