கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ்பகுதியில், பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் நள்ளிரவில் ஒளிரவிடாமல் அணைப்பதால், திருட்டு சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.கிணத்துக்கடவில், நான்குவழிச்சாலை பணியில், மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கர்டரில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.ஆனால், மேம்பாலத்தின் கீழ் மின் விளக்கு வெளிச்சத்தால், பஸ் ஸ்டாண்ட், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில் அடிவாரம், பழைய செக்போஸ்ட் பகுதிகளில் போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சம்பவங்கள் தெளிவாக பதிவாகி வந்தது.கடந்த சில வாரங்களாக, மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் நள்ளிரவு, 2:00 மணியளவில் ஒளிரவிடாமல் அணைக்கப்படுகிறது.இதனால், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு முழுவதும் இருள் மண்டியுள்ளது. இதனை, சட்டவிரோத கும்பல் தவறாக பயன்படுத்தும் வாய்ப்புள்ளதால், மக்கள் பஸ் ஸ்டாப்புகளில் நிற்க அச்சப்படுகின்றனர்.மேலும், குற்ற சம்பவங்கள் நடந்தால், கேமராவில் பதிவாகாமல் போக வாய்ப்புள்ளது. இதனால், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதிலும் சிக்கல் ஏற்படும். இதனை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பாலத்தின் கீழ் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குளை விடியும் வரை ஒளிர விட நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE